குறிச்சொற்கள் புலோமர்
குறிச்சொல்: புலோமர்
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–50
50. அனலறியும் அனல்
சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன் அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53
கிருதயுகத்தில் கோசலநாட்டில் சோமகன் என்னும் சந்திரகுலத்து அரசன் ஒருவன் ஆண்டிருந்தான். நூறுபெண்களை மணந்து ஐம்பதாண்டுகள் வாழ்ந்தும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மைந்தரின்மை அவனை நோயென பீடித்தது. தன்னை நோக்கும் எவ்விழிகளிலும் தனக்கு மைந்தரில்லை...