குறிச்சொற்கள் ஜமதக்னி

குறிச்சொல்: ஜமதக்னி

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 33

கன்யாகுப்ஜத்தை ஆண்ட காதி குசர்குலத்தின் முதன்மைப் பேரரசன் என்று கவிஞர்களால் பாடப்பட்டான். கங்கை ஒழுகிச்சென்ற நிலமெங்குமிருந்த பல்லாயிரம் ஊர்களில் ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் அவனுடைய பேர்சொல்லி கதைகள் சொல்லப்பட்டன என்றனர் நிமித்திகர். விஷ்ணுவிலிருந்து பிரம்மன்,...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 1

பகுதி ஒன்று : செந்தழல் வளையம் - 1 “செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது? விழிமுனைகளன்றி பகையேது? ஆடியன்றி கூற்றமேது?” பெரிய நீலநிறத்தலைப்பாகைக்கு மேல் இமயத்து நீள்கழுத்து நாரையின் வெண்பனியிறகைச்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35

பகுதி ஆறு : அரசப்பெருநகர் தங்கள் பன்னிரு குழந்தைகளுடன் மாலையொளியில் விண்ணில் உலா சென்ற சுதாமன் என்னும் மேகதேவதையும் அவன் மனைவி அம்புதையும் கீழே விரிந்துகிடந்த பூமாதேவியைப் பார்த்தனர். உயிரற்று செம்பாறையின் அலைகளாகத் தெரிந்த...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 23

பகுதி ஐந்து : நெற்குவைநகர் ஹேகயர்குலத்து கார்த்தவீரியன் தன் சிம்மங்களுடன் தேரிலேறி மாகிஷ்மதிக்கு வந்தான். அவனுடைய தேர் கோட்டையைக் கடந்து நகர்புகுந்தபோது யாதவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து மழைக்கால ஈசல்கள் போல கிளம்பி தெருக்களில்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22

பகுதி ஐந்து : நெற்குவைநகர் பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 15

பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி காலகம் என்னும் அடர்வனத்தின் நடுவே இருந்த ஸ்தூனகர்ணனின் பதிட்டையின் மேல் இளமழையும் அருவிச்சிதர்களும் சேர்ந்து பெய்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழைசெறிந்து காலடியில் இருளைத்தேக்கிவைத்திருந்தன. மழைக்காலத்தில்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30

பகுதி ஆறு : தீச்சாரல் மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது....