பொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில்

sugadev

ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் மூலமாக சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் உள்ள நாவல்களை வாசிக்க தொடங்களாம் என்று க.நா.சுப்ரமண்யம் அவர்களின் “பொய்த் தேவு ” படிக்க ஆராம்பித்தேன்.

படிப்பதற்கு மிகவும் எளிய நடையில் தான் இருந்தது. நாவல் சோமு முதலியார் என்ற சாத்தனூர் மேட்டுத்தெரு வாசியை வைத்து நகர்கிறது, அவன் தேடலையும் அவன் அடைந்த உச்சத்தையும் பின் எல்லா வற்றையும் உதறி விட்டு அவன் அடையும் நிலையையும் காண்பிக்கிறது.  நான் காவேரி கரையில் இருக்கும் நிலத்தை சேர்ந்தவன் (மேட்டூர்) என்பதானாலோ என்னவோ இந்த நாவல் எனக்கு மிகவும் அனுக்கமான ஒன்றாக கருதுகிறேன்.

” காவேரி நதியை கவிகள் பாடியிருக்கிறார்கள். இரண்டாயிரம் வருஷ காலமாகப் பாடியிருக்கிறார்கள். இன்னமும் இரண்டாயிரம் வருஷங்களோ, இருபதினாயிரம் வருஷங்களோ, இரண்டு லட்சம் வருஷங்களோ பாடிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ” முடிவில்லாம் காவேரியை வர்ணித்துக்கொண்டு தான் இருப்பார்கள். காவேரி ஆற்றை பற்றி வரும் வர்ணனைகள் எல்லாம் என்னை மிகவும் உவகைக் கொள்ள செய்தது. நம் நிலத்தையும் நதியையும் பற்றி படிக்கும் போது எல்லாம், இவ்வகை மனத்துள்ளலுக்கு என்ன தான் காரணமோ. நதியையும் மண்ணையும் எவ்வளவு தான் வர்ணித்தாலூம் முடிவில்லாமல் அது வந்துக்கொண்டே தான் இருக்கும் போல. காவேரி ஆறு ஆனியில் இருந்து தை, மாசி வரை கரை புரண்டு ஓடும் பின் மூன்று மாதம் வற்றி விடும், பின் ஆடியில் மீண்டும் புது வெள்ளம் ஓடும், காவேரி ஆறு எப்படி உருமாறி உருமாறி இப்படி முடிவில்லாம் ஆடிக்கொண்டு இருக்கும் ஆட்டத்தை காட்சியப் படுத்துகிறார் ஆசிரியர். இதை என் அம்மா சொல்லிக் கூட கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் இப்போது இந்த காட்சிகள் இங்கு பார்ப்பது கஷ்டம் தான். தண்ணீர் நான் கரைப்புரண்டு ஓடி கடைசியாக 10 வருடங்கள் மேல் இருக்கும்.

நாவல் சாத்தனூர் மேட்டுத் தெரு பற்றி வர்ணிக்க ஆரம்பித்து அவனின் பெற்றோர் பற்றி மற்றும் காவேரி இப்படி ஆரம்பம் ஆகிறது.

ka.na.su

மூன்று வயதில் அந்த கோவில் மணி ஓசையும், வீட்டினுள் வரும் சூரிய ஒளி ஆரம்மாகிறது சோமுவின் தோடல். பின் தந்தையை இழக்கிறான். ஆனால் அவன் தந்தை கறுப்பன் ஒரு முரடன், எங்கு சென்றாலும் கறப்பன் மவன் என்று இழிவு செய்யப்படுகிறான். ஐந்து வயதில் அவன் கொள்ளும் ஆசைகள், தாகங்கள், அளவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. மொத்த சாத்தனூரையே அவன் தன் கால்களால் அளந்து விடுகிறான். மொத்த கடைத்தெருவையுமே காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று ஆசை கொள்கிறான். கல்வி கற்க வேண்டும் என்று ஆசை கொள்கிறான். ஒரு ஏழையாக இருக்கும் அவன் இப்படி பல ஆசைகள் மூலம் ஒவ்வறு அசையாக கடந்து செல்கிறான்.

அவன் “கறுப்பனின் மகன் இப்படி தான் இருப்பான்” என்ற பெயரை மண்டும் அவனால் துறக்க முடியவில்லை. ஆதற்கு பிறகு தான் அவன் ராயர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து எதிர் பாத்திராத சில நிகழ்வுகளால் அந்த பெயரை விட்டு முன் செல்கிறான். ஒரு நல்ல பயள் என்று பெயர் பெற்றும், கல்வி பெறுகிறான். மற்றும் சாம்பமூர்த்தி ராயரின் உதவியால் ஒரு கடை அமைந்து வெற்றி பெற்றுக்கொண்டு செல்கிறான். காவேரி உருமாறுவது போல அவன் பெயரும் உருமாற தோடங்குகிறது, கறுப்பன் மவனில் இருந்து ராயர் வீட்டு வேலைக்காரன், சோமு முதலியார், மளிகைக்கடை சோமு முதலியார், மளிகை மர்ச்சண்டு சோமு முதலியார், இன்சுரன்ஸ் ஏஜண்டு, கும்பகோணம் மளிகை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனர், போன்ற பல பெயர்கள் பெற்று முன்னேறுகிறான், சோமு முதலி.

ஆனால் அவனால் எந்த உயரத்துக்குச் சென்றாலும் மேட்டுத் தெரு வாசி என்கிற அடையாளத்தை துறக்க முடியவில்லை, ஒரு வழியாக அவன் துறந்து விட்டு வந்தும் கூட அது அவனின் ஆழத்தில் உறைந்து கொண்டு தான் இருந்தது.

எப்படி எல்லா கதைகளில் வருவது போல, உழைப்பால் உயர்ந்த சோமு முதலிக்கு நேர் எதிரான ஒரு மகனாக நடராஐன் ஊதாரியா திரிகிறான். கறுப்பன் மகன் என்ற பெயர் போய் இப்போது நடராஐனின் தந்தை என்ற பெயர் பெற்றான் அவனுக்கு அவ பெயர்கள் மாறி மாறி வரத்தான் செய்தது. ஒரு காலத்தில் அவன் தந்தையால் என்றால் இப்போது அவன் மகனால், முதலாவதர்க்கு அவன் காரணம் இல்லை என்றாலும் இரண்டாம்வற்றிர்க்கு அவன் தான் முழுக்காரணம்.

பின் இக்கதைகளில் வரும் சகதர்மிணிகள் க.நா.சு இங்கு கற்பை மிகவும் பரந்த மனதுடன் எதார்த்தமாக சொல்லி செல்கிறார், இங்கு அவர் எதார்த்த வாழ்வில் நிகழ்வனவற்றை அல்லவா கூறுகிறார். ராயரின் மனைவியை கற்புக்கு ஆதாரமாக கூறினாலும், அவர்களை பற்றி அதிகம் விவரிக்கவில்லை,

ஆனால் அதற்கு நேர் எதிராக க.நா.சு இங்கு இரண்டு தரப்பிலும் உள்ள வல்லியமையையும் கோமளவல்லியையும் காட்டுகிறார். அவர்களின் கற்பு நிலைகளை விரிவாக சொல்கிறார். அதை பற்றி பல கொணங்களில் சொல்கிறார். “கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே இது தான் ஐயா பொன்னகரம் ” என்ற புதுமைப்பித்தனின் தளத்தில் எழுதியவர் அல்லவா க.நா.சு. என்ன வியப்பு என்றால் சுகந்தர போராட்டம் உச்சம் பெற்ற காலத்தில் வெளி வந்த இந்த கதை அப்போது எப்படி பட்ட ஒரு அலையை கிளப்பி இருக்கும்.

பின் ராயரின் குடும்பம், சொத்துகள் எல்லாம் தான, தருமத்தில் அழிந்து கொண்டு இருந்ததை எண்ணி எண்ணி வருந்துகிறார், ஆனால் சாம்பமூர்த்தி ராயர் ஏழை, எளியவர்களுக்கு செய்து புன்னியம் ஈட்டுவது என்ற உயர்ந்த இலட்சியம் உடன் இருந்தார், ஒரு கட்டத்தில் அவர் அனைத்தையும் விட்டு பண்டாரம் ஆகி இறக்க நேர்ந்த செய்தி அறிந்த சோமு முதலியார் மிகுந்த மனவேதனை கொள்கிரார்.

“கண்களை முடிக்கொள்ள வேண்டும் போல இருந்தது, காதுகளை பொத்திக் கொள்ள வேண்டும் போல இருந்தது, ஆனால் மனசை, உள்ளத்தை, இருதயத்தை என்ன செய்வது? “

சோமு முதலியாரும் பணம் பணம் என்று இத்தனை வருடமாக சேர்த்து வைத்ததை எல்லாம் உதரிவிட்டு பண்டாரம் ஆகிரார், சோமு முதலிக்கு பணத்தாசை இல்லை தான், ஆனால் பணத்தையே தெய்வமாக வணங்க கூடியவர். நேர்மையாக தான் தொழில் செய்தார் ராயரின் மரணம் அவரில் ஒரு மணியை ஒலிக்க செய்கிறது அதை கடக்க அவர் எவ்வளவு முயன்றும், தொழில் முழுவதும் ஈடுபட்டும் அதை கடக்க பார்கிறார் ஆனால் இறுதியில் இதை எல்லா வற்றையும் உதறிவிட்டு செல்கிறார்.

ராயரும் ஒரு பெரும் லட்சியத்துடன் தான் தானமும், தர்மங்களும், பூஜைகளும் செய்து வந்தார் அவரும் ஒரு கணத்தில் இதை துறந்து செல்கிறார். “பொருள் என்று மட்டுமல்ல, மனிதன் ஏற்றுக்கொள்கிற எல்லா லட்சியங்களையும் இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பதுதான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை ” என்கிறார் க.நா.சு. கதையில் ஒரு வரி “நான் பிறந்த அதே வினாடியில் பிறந்தது தான் இவ்வுலகமும் “. இறுதியில் சோமு முதலியே சொல்லி முடிக்கிறான் ” உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வங்களும் உண்டு — இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாடிக்கொரு தெய்வம் உண்டு “. சோமு முதலி மேட்டுத் தெரு வாசியாகவே மறைகிறான்.

பா.சுகதேவ்

மேட்டூர்.

முந்தைய கட்டுரைஆரியர் வருகை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமழைப்பயணம் 2017