ஆஸ்திரேலியா ஒரு கடிதம்

index

ஆஸ்திரேலியா, சூடாமணி -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

சூடாமணி அவர்களது கடிதம் தொடர்பாக எனது தனிப்பட்ட கணிப்பின்படி, இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சம்பவங்களின் பின்னணி காரணங்கள் இவையே:

பெரும்பாலான இந்தியர்கள் மாணவர்கள் அல்லது சமீபத்தைய குடியேற்ற வாசிகளில் அநேகம் பேர்

இரவு நெடு நேரம் சிற்றுண்டிச்சாலைகள், துப்புரவுப்பணிகளில் பகுதி நேரமாக பணியாற்றுகின்றர்.

இவர்கள்சொந்த வாகன வசதிகளற்ற பஸ், ரயில் பிரயாணிகள்.

வெகுதூரங்களில், குறைந்த வாடகையுள்ள வீடுகளில் வசிப்பவர்கள். இரு அறைகள் கொண்ட பிளாட் ஒன்றில் குறைந்தது 6,7 பேர் வாழக்கூடும் -காலை ஷிப்ட்டில் 4 பேரும், இரவுப்பணியில் 4 பேரும் சென்றால் எல்லோருக்கும் கட்டிலும், மெத்தையும் கிடைப்பது உறுதி!!.

பகுதிநேர வேலைகளுக்கு பெரும்பாலும் கரன்சியே சம்பளமாக அளிக்கப்படுகிறது.(உபயம், வருமானவரி இலாகா!!) ஆக, இவர்களது பைகளில் எப்பவும் பணம் இருக்கும்.

இவர்கள் வர்க்க ரீதியாக, திருடர் மற்றும் பிக்பாக்கட்காரர்களால் குறி வைக்கப்படும் ஒரு சாதி, மத சார்பற்ற தனி இனம்.

1980-90களில் சீனர்கள், வியட்நாமியர், இலங்கையர்கள் இவ்வாறான வன்முறைக்கு ஆளானார்கள். தற்போது இந்தியரகள் இங்கு இடம் வகிக்கிறார்கள்.

எனில், இது இனவாதம் அல்ல, திருடர்கள் குறிவைக்கும் தனிஒரு பிரிவு. இதை சம்பந்தப்பட்டோர் உணர்ந்தால் தம்மை உரிய முறையில் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அன்புடன்,

மைத்ரேயி நாத்.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38
அடுத்த கட்டுரைஉசாவல்