புதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

 

நண்பர்களே,

இவ்வாண்டு ஈரோட்டில் நடத்திய புதிய வாசகர் சந்திப்பு தீவிரமும் உற்சாகமுமாக கழிந்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், குறியீடுகள், சிந்தனை முறைகள் என பல தலைப்புகளில் விசை குன்றாமல் இயல்பாக உரையாடல் நடைபெற்றது. புதியவர்களின் சில சிறுகதைகளும் கட்டுரையும் விவாதிக்கப்பட்டது. ஈரோடு சந்திப்புக்கு விண்ணப்பித்த அனைவரையும் அழைத்துக்கொள்ள இயலவில்லை, எனவே அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக வரும் மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் தஞ்சை, வல்லத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா கலை & அறிவியல் கல்லூரியில் அடுத்த புதிய வாசகர் சந்திப்பை நடத்த உள்ளோம். ஜெயமோகன் இரு நாட்களும் அக்கல்லூரியில் தங்கி வாசக நண்பர்களை சந்திப்பார், மார்ச் 19 இரவு தான் ஊர் திரும்புகிறார். சந்திப்பு மார்ச் 18 காலை 10 மணி முதல் 19 மதியம் 1.30 வரை நடைபெறும்.

கடந்த முறை விண்ணப்பித்து தகவலும் தெரிவிக்காமல் தவறியவர்கள் மற்றும் முதல் நாள் கலந்து கொண்டு அன்றே திரும்பிச் சென்றவர்கள் என ஒரு சிலர் இருந்தனர். அவர்கள் தகுதியும் தீவிரமும் கொண்ட பிற வாசகர்களின் இடத்தை வீணடித்துவிட்டனர். எனவே ஏற்கனவே விண்ணப்பித்து உரிய தகவல் தெரிவிக்காமல் தவறியவர்கள், சம்பிரதாயமாக விண்ணப்பிப்பவர்கள் ஆகியோர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். உண்மையிலேயே உறுதிப்பாடும் தீவிரமும் இருக்கும் வாசகர்கள் மட்டும் பெயர், வயது, தொழில், தொலைபேசி எண், முகவரி மற்றும் சுயவிபரத்துடன் கீழ்கண்ட விண்ணப்பத் தாளை நிரப்பி விண்ணப்பித்தல் நன்று, ஏற்பாடுகள் செய்ய எளிதாக இருக்கும்.

அதே போல ஏற்கனவே புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள், அவர்களையும் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சந்தித்த புதிய வாசகர்களை மீண்டுமொருமுறை இவ்வாண்டுக்குள் சந்திக்கும் திட்டமும் ஜெயமோகனுக்கு உண்டு, அங்கு பார்த்துக்கொள்ளலாம், அல்லது “ஜெ”வை அவர் இல்லத்தில் சந்திக்கலாம்.

கடந்த ஈரோடு சந்திப்புக்கு பதிவு செய்து இடம் கிடைக்காதவர்கள் இப்போதும் விண்ணப்பித்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம்

தொடர்புக்கு [email protected]

கிருஷ்ணன்,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

 

தனித்தொடர்புக்கு :

கிருஷ்ணன், ஈரோடு : 98659 16970, ([email protected])

சக்தி கிருஷ்ணன், திருச்சி : 98942 10148.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
அடுத்த கட்டுரைதேவதேவன் – கடிதம்