வருகையாளர்கள் -1.எச் .எஸ்.சிவப்பிரகாஷ்

HS_Shivaprakash

எச் எஸ் சிவப்பிரகாஷ் கன்னடத்தின் நவீனத்துவ இயக்கமான நவ்யாவின் எதிர்வினையாக உருவாகி வந்த படைப்பாளி. மேலைநாட்டு வழிபாட்டு நோக்கு கொண்ட நவீனத்துவத்தை மூர்க்கமாக எதிர்த்து கன்னடத்தின் பண்பாட்டுத்தனித்தன்மைகளில் இருந்து தன்னை உருவாக்கிக்கொண்டவர். கன்னட வீரசைவ மரபின் ஆன்மீக சாரம் அவரது எழுத்துக்களில் உண்டு. அன்றாட யோகி என்னும் அவருடைய குறிப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. https://harpercollins.co.in/book/everyday-yogi/

ஆனால் ஆன்மிகம் மதமாக ஆவதற்கு முற்றிலும் எதிரானவர் எச்.எஸ் சிவப்பிரகாஷ். வீரசைவ மரபு வெறும் சடங்குகளில் சிக்குவதை கடுமையாக விமர்சித்த அவரது நாடகமான மகாசைத்ர மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவர் கன்னட வீரசைவ வெறியர்களால் தெருவில் இழுத்துச்செல்லப்பட்டு அந்த மடாதிபதிமுன் மண்டியிடவைக்கப்பட்டார் என அன்று செய்திகள் வெளியாகின. கீதா ஹரிஹரனின்  In Times of Siege (2003), என்னும் நாவல் இந்நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது.

கன்னட இலக்கிய உலகில் ஆணவம் மிக்க கலகக்காரர் என்றும் தனிவழிச்செல்லும் மூர்க்கர் என்றும் துடுக்கான விமர்சகர் என்றும் சிவப்பிரகாஷ்  குற்றம்சாட்டப்படுகிறார். அவருடைய ஆளுமை அதற்கு அப்பால் இலக்கியத்திற்கென முழுமையான அர்ப்பணிப்பு கொண்டது.

சிவப்பிரகாஷ் நாடக வடிவம் மேல் காதல்கொண்டவர். தன் கவிதைகளை அவர் சிறப்பாக மேடையில் பாடுவதுமுண்டு. தமிழ்ப்பண்பாட்டின் கூறுகளை கன்னட இலக்கியத்தில் நிறுவியவர் சிவப்பிரகாஷ். கன்னட மரபின் அடியிலுள்ள தமிழ்ப்பண்பாட்டு அம்சத்தை எப்போதும் கவனப்படுத்தியவர். அவருடைய மதுரைக்காண்டம் சிலப்பதிகாரத்தை அடியொற்றிய நாடகம். அது ஏராளமானமுறை வெற்றிகரமாக நடிக்கப்பட்டிருக்கிறது

=================================================================================================

எச் எஸ் சிவப்பிரகாஷ் அறிமுகம் விக்கி

மதுரைக்காண்டம் நாடகம் முழுவடிவம்

எஸ் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

எச் எஸ் சிவ்பப்பிரகாஷ் கவிதைகள்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 2

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள் 3

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
அடுத்த கட்டுரைவருகையாளர்கள் -2 இரா முருகன்