வருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை

bava_2

 

 

பவா செல்லத்துரை எனக்கு சகஎழுத்தாளர் என்பதைவிட முப்பதாண்டுக்கால நண்பர் என்று சொல்வதே பொருத்தம். நான் 1987ல் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். இன்றுவரை நீடிக்கும் அணுக்கம் அவருடையது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணக்கமான முகமாக ஒரு காலகட்டத்தில் பவா அறியப்பட்டார். கட்சியின் துணையமைப்பாக, வெறும்பிரச்சாரக்குழுமமாக இருந்த அதை அனைத்து இலக்கியவாதிகளுடனும் தொடர்புள்ளதாகவும் அனைத்து இலக்கியவிவாதங்களிலும் பங்கெடுப்பதாகவும் மாற்ற அவரால் முடிந்தது. அவர் திருவண்ணாமலையில் நிகழ்த்திய கலையிலக்கிய இரவு என்னும் நிகழ்ச்சி பின்னர் தமிழகம் முழுக்கவே பரவியது. மார்க்ஸியத்தை ஏற்காதவர்கள் கூட வந்து அமர்ந்து விவாதிக்கும் மேடையாக அவருடைய நிகழ்ச்சிகள் மாறின

விளைவாகத் தமிழிலக்கியத்தின் அமைப்பிலேயே ஆழமான செல்வாக்கைச் செலுத்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் முடிந்த்தது. மாய யதார்த்தவாதம் முதலிய எழுத்துமுறைகளை இலக்கியத்திற்குள் கொண்டுவந்தது அந்த உரையாடலே. இனிய நட்புக்கூடல்களாக இருந்தவை அந்த நாட்களைப்பற்றி பவா தன் எல்லாநாளும் கார்த்திகை என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்

அந்நாட்களில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட ஸ்பானியச்சிறகும் வீரவாளும் நான், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்று இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும் ஒரு அடித்தளமாக அமைந்த தொகுப்பு. பலவகையான எழுத்துக்களின் கலவை அது. பவா செல்லத்துரையும் அந்த மேடையிலிருந்து உருவாகிவந்தவர்

நாட்டாரியலில் இருந்து உருக்கொண்ட மாயயதார்த்தத் தன்மையும் முற்போக்கு எழுத்தின் மனிதாபிமான நோக்கும் கலந்த கலைப்படைப்புக்கள் என பவா செல்லத்துரையின் எழுத்துக்களைச் சொல்லலாம். தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் உச்சகட்டச் சாதனைகளாக அமைந்தவை அவர் எழுதிய கதைகளில் சில.

 

பவா செல்லத்துரை இணையப்பக்கம்

பவா செல்லத்துரை சில சிறுகதைகள்

======================================

 

பவாவும் யோகியும் நானும்

பவா செல்லத்துரை கதைசொல்கிறார் சுரேஷ் கண்ணன்

=========================================

 

 

பிற அழைப்பாளர்கள்

index

 

 

 

 

 

 

 

 

ச் எஸ் சிவப்பிரகாஷ்

 

index

 

 

 

 

 

இரா முருகன் அறிமுகம்

 

 

bava_2

 

 

 

 

 

பவா செல்லத்துரை அறிமுகம்

dr-siva-raman

 

 

 

 

 

 

 

 

 

 

 

கு சிவராமன் அறிமுகம்

முந்தைய கட்டுரைஒண்ணுமே படிச்சதில்லை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி