மேலும் இரு சிறுகதைகளைப் பற்றி…

images

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மேலும் இரு கதைகளைப் பற்றி –

பாம்பு வேட்டை

மற்றொருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சிதறுவதைப் பற்றிப் பேசும் கதை. விஷயங்கள் நமக்கு சொல்லப்படுகின்றன. கதாப்பாத்திரங்களின் உணர்ச்சிகள் நமக்கு சொல்லப்படுகின்றன. ஆனால் வாசகராக நம்மால் அதே போல உணர முடியவில்லை.பாஸ்கருக்கும் அவன் முதலாளிக்கும் இடையே மரியாதையும், சார்புநிலையும் ஏன் உருவாகின்றன என்பது தெளிவாக இல்லை. அதே போல அவை முறியும் காரணமும் (விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான இயலாமை) பலவீனமாக இருக்கிறது.

மேலும் இந்த அனுபவத்தின் மூலம் பாஸ்கர் அடைந்தது என்ன? ஏமாற்றம் என்பது உடனடியான உணர்வெழுச்சி. கதை இங்கு முடிவடையாமல் சென்றிருக்க வேண்டும்.

உடனடி சலனத்தைத் தாண்டி அந்த அனுபவம் அவன் குணச்சித்திரத்தின் மீது அல்லது வாழ்க்கை நோக்கின் மீது விளைவிக்கும் மாற்றத்தை முன்வைக்க வேண்டும். அதுவே இலக்கியப் படைப்பு என நினைக்கிறேன். (உங்கள் அலை அறிந்தது கதையின் கபீர் பாய் நினைவிற்கு எழுகிறார்).

தச்சன்

ஆராயத்தக்கக் கருத்தை முன்வைக்கிறது தச்சன். எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் (தெய்வமே ஆனாலும்) தனிப்பட்ட அன்பிற்கான தேடல் அணைவதில்லை. (தனி மனிதனைச் சாராத பொதுப்படையான அன்பைக் கையாளக்கூடியவர்கள் துறவிகள் மட்டும் தானா? தெய்வங்களுக்குக் கூட அப்பாற்பட்ட விந்தை போலும்). கிறித்துவ/பைபிள் சார்ந்த படிமங்களுக்கும் கதைகளுக்கும் எனது அறிமுகம் மிகக் குறைவே. அதனால் இதைச் சற்று தயக்கத்துடன் முன்வைக்கிறேன் – தச்சன் சிறுகதையின் முழு வடிவம் பெறவில்லை. பேசப்பட்ட விஷயத்தை புதிய வடிவில் அளித்தது போல தோன்றுகிறது.

ஒரு ஆலோசனை – இருவருடைய கோணத்திலிருந்து கதை நமக்கு அளிக்கப்படுகின்றது – மக்தலீன் மற்றும் தச்சன். பக்தனின் கோணம் அறியப்பட்டதே. அதனால் மக்தலீன் மூலம் கதை முன்னகர்வதைத் தவிர்க்கலாம் (அந்தப் பகுதிகள் கதையைக் காட்டிலும் வழிபாடாக வெளிவருகின்றன).

தச்சனின் கோணத்திலிருந்து மட்டும் அணுகினால் கதைக்கரு மேலும் வலுவடையும். புனைவுக்கு இன்னும் இடம்கொடுத்து அணுக முடியாத ஒருவருக்கு அருகே கொண்டு செல்லும். It could produce a good balance between the mystical and the human.

ப்ரியம்வதா

 

==============================================================================

சிறுகதைகள் என் பார்வை -1

சிறுகதைகள் என் பார்வை 2

சிறுகதைகள் என் பார்வை 3

==============================================================================

சில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி

சில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்

சில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்

சில சிறுகதைகள் 3  மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி

சில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்

சில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்

==============================

சிறுகதை விமர்சனம் 1

சிறுக்தை விமர்சனம் 2

சிறுகதை விமர்சனம் 3

சிறுகதை விமர்சனம் 4

சிறுகதை விமர்சனம் 5

சிறுகதை விமர்சனம் 6

சிறுகதை விமர்சனம் 7

சிறுகதை விமர்சனம் 8

சிறுகதை விமர்சனம் 9

சிறுகதை விமர்சனம் 10

சிறுகதை விமர்சனம் 11

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29
அடுத்த கட்டுரைகெய்ஷா -கடிதங்கள் 3