கர்ணன்

1

மதுரையில் அலெக்ஸ் நடத்திய அயோத்திதாசர் விழாவுக்குச் சென்றிருந்தபோதுதான் எழுத்தாளர் கர்ணனை சந்தித்தேன். அவரது சில எழுத்துக்களை அந்தக்கால தீபம் இதழில் வாசித்த நினைவு இருந்தது. நா.பார்த்தசாரதி போன்றவர்களுடன் நெருக்கமாகப் பழகிய எழுத்தாளர். ஆனால் முற்போக்கு முகாமைச்சேர்ந்தவராக தன்னை நிறுத்திக்கொண்டவர்

அதற்குக் காரணம் அவரது வாழ்க்கை. எளியகுடும்பத்தில் பிறந்த கர்ணன் தையல்தொழிலாளராகவே வாழ்ந்தார். தன் அனுபவங்களின் பதிவுகளாகவே நூல்களையும் எழுதினார். அவை அன்றாட எளியவாழ்க்கை இலக்கியத்தில் பதிவான ஒருகாலகட்டத்தின் இலக்கியங்கள்.

இன்று தையல்பணி இல்லாதநிலையில் பொருளியல்சிக்கலில் அவர் இருப்பதாகச் சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணன் அவரது இணையதளத்தில் கர்ணனைப்பற்றி எழுதியிருக்கிறார்.

திரு. கர்ணன்

37,  சுயராஜ்யபுரம் 4 வது தெரு

செல்லூர். மதுரை – 2

தொலைபேசி.  9487950844

என கர்ணனின் முகவரியை அளித்து நண்பர்கள் உதவவேண்டும் என கோரியிருக்கிறார். அக்கோரிக்கையை நானும் முன்வைக்கிறேன்.

எஸ் ராமகிருஷ்ணன் கர்ணன் குறித்து எழுதிய கட்டுரை

முந்தைய கட்டுரைவிடலையும் குடும்பனும் – பூமணியின் அஞ்ஞாடி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 21