அவதூறான தகவல் -கடிதம்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன்,

வணக்கம். ‘எம்.எஃப்.ஹுசைன் இந்து தாலிபானியம்’ என்கிற தலைப்பில் நவம்பர் 13 2009 அன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை நீங்கள் நவம்பர் -7-2015 அன்று மீள் பிரசுரம் செய்திருக்கிறீர்கள்.

//இன்று ஹ¤சேய்னுக்கு எதிராக திரும்பும் நேற்று நீங்கள் ஆனந்தமார்க்கத்தை வேட்டையாடினீர்கள். தலைச்சேரி சித்தாசிரமத்தை வேட்டையாடினீர்கள். ஏன், பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த திகம்பரச் சமணமுனிகள் மீது பச்சைமலத்தை பொட்டலம் கட்டி வீசியவர்கள் உங்கள் இந்துமுன்னணி இயக்கத்தினர்.//

இந்த கட்டுரை முதலில் பிரசுரிக்கப்பட்ட போதே இது தவறான தகவல் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. திகம்பர சமண முனிவர்கள் இங்கு வந்த போது எதிர்த்தவர்கள் திகவினர். அப்போது இந்து இயக்கத்தை சார்ந்தவர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள் என்பது அப்போது செய்தியாகவே வந்தது. ’அப்படியா ஏதோ ஞாபகத்தில் எழுதிவிட்டேன்’ என்று அப்போது தனிப்பட்ட தொலைபேசி உரையாடலில் கூறினீர்கள். ஆனால் இந்த தவறான அவதூறு தகவலை திருத்தமில்லாமல் அப்படியே மீள் வெளியிட்டிருப்பது அவ்வளவு நேர்மை நிறைந்த விஷயமல்ல என கருதுகிறேன். விசாரித்த போது இந்து முன்னணியின் நிறுவன தலைவர் திரு. ராம.கோபாலன் அவர்களும் இப்படி எவ்வித நிகழ்ச்சியும் நடக்கவில்லை என மறுத்திருக்கிறார். எனவே இந்த தவறான உண்மைக்கு புறம்பான தகவலை அகற்றுவது நேர்மையான செயலாக இருக்கும். உங்கள் எழுத்தரசியல் தேவைக்கு ஏற்பவும் தங்கள் இஷ்டப்படியும் மாற்றுவதோ மாற்றாமலிருப்பதோ தங்கள் உரிமை.

பணிவுடன்
அரவிந்தன் நீலகண்டன்

பெருமதிப்பிற்குரிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு,

அந்தத்தகவல் முன்னரே மறுக்கப்பட்டதனால் அது நீக்கப்பட்டிருந்தது. அக்கடிதமும் பிரசுரமாகியிருந்தது. மறுபிரசுரம் முந்தைய வடிவங்கள் ஒன்றாக அமைந்தது தொழில்நுட்பச்சிக்கல். பல கட்டுரைகள் அவ்வாறு முந்தைய வடிவங்கள் மீட்டு அமைக்கப்பட்டன

மன்னிக்கவும்

ஜெ

முந்தைய கட்டுரைஎம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்
அடுத்த கட்டுரைவலைதளத் தொடக்கவிழா