முதற்கனல் – நோயல் நடேசன்

வெண்முரசு விவாதங்கள்

பாரதத்தின் ஆரம்பத் தொகுதியான முதற்கனல் குலவரலாற்றை பல உப கதைகளாக தருகிறது. அக்காலத்திற்கு ஏற்ற நதிகள், காடுகள், மற்றும் மலைகள் சக்திவாய்ந்த தேவர்கள், கந்தர்வர்கள் என்ற மாயாவாத தன்மையுடன் அமைந்திருக்கிறது. உண்மையில் மாயாவாத எழுத்துகள் தற்பொழுது எழுதும் அமெரிக்க , லத்தீன் அமெரிக்க இலக்கியம் எழுதுபவர்கள் தவறாமல் பாரதத்தை படித்தால் அவற்றின் உண்மையான ஊற்றுக்கண் இங்குள்ளது என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதேபோல் விலங்குகளை கதைப் பாத்திரமாக்கி உலாவ விடுதலின் ஆரம்பம் இந்தியாவே என மேற்குலகம் ஒப்புக்கொள்கிறது. அதற்குக் காரணம் பௌத்த ஜாதகக்கதைகள், ஈசாப் கதைகளாகி தற்பொழுது மிக்கி மவுசாக உலகெங்கும் வலம் வருகிறது.

நோயல் நடேசன் அவர்களின் பதிவு

முந்தைய கட்டுரைடார்த்தீனியம்-[குறுநாவல்]-1
அடுத்த கட்டுரைதியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்