வேணு தயாநிதி- வேதா

த. வேணுகோபால். சுருக்கமாக வேணுகோபால் தயாநிதி அல்லது வேணு தயாநிதி.

அப்பா தயாநிதி மணியகாரர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்(மறைவு),

அம்மா விஜயலட்சுமி. ராணி அலமேலு, சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன்பிறந்தவர்கள்

கோவை பொள்ளாச்சி தாலூகா குப்பிச்சிபுதூர் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியிலும் ஆனைமலை அரசுமேல்நிலைப்பள்ளியிலும் பதினொன்றாம் வகுப்புவரை பள்ளிப்படிப்பு.

மதுரைக்குக் குடிபெயர்ந்து பசுமலை மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம்வகுப்பு.

மதுரைக்கல்லூரி, அமெரிக்கன்கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலை ஆகியவற்றில் விலங்கியல், உயிரியல் பட்டப்படிப்பும் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சிப்படிப்பும்.

முனைவர் பட்டம்பெற்ற பின் மாஸசூஸட்ஸ் பல்கலையின் உதவித்தொகையில் சிலஆண்டுகள் ஆராய்ச்சிப்படிப்பு.

தற்போது மினசோட்டா பல்கலையின் உதவித்தொகையில் புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சி செய்துவருகிறார்.

நேயா, தியா என இரு குழந்தைகள் மதுமதி என்ற பெயரில் ஒருமனைவிதான். இலக்கியத்தைப்போலவே ஆசிரியருக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு.

முந்தைய கட்டுரைமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்
அடுத்த கட்டுரைதேவதச்சனின் கலைக்கூடம்-வேணுகோபால் தயாநிதி-