தமிழின் முக்கியமான படைப்பிலக்கியவாதியான எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு கல்கத்தாவில் இருந்து அளிக்கப்படும் தாகூர் இலக்கியவிருது வழங்கப்பட்டுள்ளது. கொரிய நிறுவனமான சாம்சங் சாகித்ய அக்காதமியுடன் இணைந்து இந்த விருதை 2009ல் உருவாக்கியுள்ளது. ஒருவருடம் இந்தியாவின் இருபத்துநான்கு மொழிகளில் எட்டுமொழிகளின் எட்டு முக்கியமான படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக தமிழுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது
91 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் பாராட்டுப்பத்திரமும் தாகூர் உருவச்சிலையும் அடங்கியது இந்த விருது.எஸ். ராமகிருஷ்ணன் விருது பெறுவது தமிழ் இலக்கியவாதிகளுக்கு பெருமை. ராமகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
கனடிய இலக்கியத்தோட்ட விருதுகள்
நெடுங்குருதி . 2 3 4