தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்!

deva1

தேவதச்சனுக்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளையின் கவிக்கோ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9 அன்று வேலூரில் நடக்கும் விழாவில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது.

கவிக்கோ விருது பெறும் கவிஞர் தேவதச்சனுக்கு  என்னுடைய, விஷ்ணுபுரம் நண்பர்களுடைய  மனமார்ந்த வாழ்த்துக்கள்.  

கவிஞன் பிறரில் மேன்மையானவன்

தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞனே பிறரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான்.மேம்பட்டவனாகிறான்.தன்னுடைய மனதளமாகவே கவிதை அமைய பெற்ற கவிஞனுக்கு மட்டுமே இந்த பண்பு சாத்தியம்.பெரும்பாலும் எங்கு தொடங்குகிறார்களோ ,அங்கேயே சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பார்கள்.சிறந்த கவிக்கு பண்பு இதுவல்ல.அவனுடைய சில கவிதைகளை படித்து விட்டு அவனுடைய விதியைப் பற்றி தீர்மானம் செய்து விடாத உயரிய பண்பை  அவன் கொண்டிருப்பான்.அவன் வாழ்வின் மீது இயற்றுகிற சலனங்கள் தொடர்ந்து மாறுதலைடைந்து கொண்டே இருக்க வல்லவை.அத்தகைய கவிகளில் ஒருவர் தேவதச்சன்

தேவதச்சன் பற்றி லக்ஷ்மி மணிவண்ணன்

முந்தைய கட்டுரைஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்
அடுத்த கட்டுரைஇந்நாட்களில்…