அஞ்சலி வடகரை வேலன்

passport

 

விஷ்ணுபுரம் நண்பர்களில் ஒருவரும் ஆரம்பகாலம் முதல் விருதுவிழாக்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்றவருமான நண்பர் வடகரை வேலன் இன்று மதியம் காலமானார். சென்ற ஒருமாத காலமாகவே நோயுற்றிருந்தார். இதயம், நுரையீரல் சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துகொண்டிருந்தது. இரண்டுநாட்களுக்கு முன்னரே செந்தில் அவர் அபாயகட்டத்தில் இருக்கிறார் என்றார். ஆனால் சிகிழ்ச்சையில் பயன் தெரிகிறது என்றும் சொல்லப்பட்டது. இவ்வார இறுதியி;ல் கோவை செல்கையில் சந்திக்கலாமென்றிருந்தேன்.

 

இலக்கிய ஆர்வம் கொண்டவர். தமிழில் நெடுங்காலமாகவே வலைப்பூ எழுதி வந்தவர்களில் ஒருவர். அனைவருக்கும் நெருக்கமான இனிய நண்பர். இத்தருணத்தில் அவருடன் பேசி சிரித்திருந்த நல்ல தருணங்கள் நினைவில் நிறைந்திருக்கின்றன

 

நண்பருக்கு அஞ்சலி

வடகரைவேலன் இணையப்பக்கம்

விஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்

 

முந்தைய கட்டுரைஇரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-53