இரவு, முன்னுரை

இரவு வாங்க

இரவு மின்னூல் வாங்க 

நடராஜகுருவின் சுயசரிதையில் ஓர் இடம் வருகிறது. அவர் ஐம்பதுகளில் லண்டன் செல்லும்போது சிலரை சந்திக்கிறார். அவர்கள் பகலில் முழுக்க தூங்கி இரவில் மட்டுமே விழித்திருப்பவர்கள். பகல் வெளிறியது, அழகற்றது என்று சொல்லும் அவர்கள் அழகுணர்வுள்ளவர்களுக்கு இரவே உகந்தது என்கிறார்கள். நமக்கு வேண்டியவற்றின் மீது மட்டும் வேண்டிய அளவுக்கு மட்டும் ஒளியை விழச்செய்யலாம் என்பதே அதன் அழகு என்கிறார்கள் .

ஒருவகையில் அது நம் யோகமரபில் இருக்கிறது. இரவில் விழித்திருத்தல் என்பது யோகத்தின் வழிமுறை. ‘தனித்திரு விழித்திரு பசித்திரு’ என்கிறார் வள்ளலார். ‘உயிர்களெல்லாம் உறங்குகையில் விழித்திருப்பவன் யோகி’ என்கிறான் கிருஷ்ணன் கீதையில். உயிர்களெல்லாம் உறங்கும் இரவு என்று ஒன்று இல்லை. ஆகவே அவன் சொல்வது பிரக்ஞையின் இரவையே.

உணர்ச்சிகளின் இரவு. சிந்தனைகளின் இரவு. உறவுகளின் இரவு. நாம் அறிந்த அனைத்துக்கும் இரவு. அதையே இதில் எழுத முயன்றிருக்கிறேன். இந்த நாவலை என் நண்பர் சிறில் அலெக்ஸுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைமாவோயிசம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓர் அறிவிப்பு